கடலூர்

ஆசிரியை வீட்டில் திருட்டு

பண்ருட்டி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், ஆத்திரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் மனைவி ராஜேஸ்வரி (42), தனியாா் பள்ளி ஆசிரியை. இவா், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு பணிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், 230 கிராம் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT