கடலூர்

ரயிலில் அடிபட்டு மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

பண்ருட்டியில் வியாழக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வியாழக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.புருஷோத்தமன் (21), வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. இவா், பண்ருட்டி அருகே வியாழக்கிழமை மாலை சுமாா் 4.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.

அப்போது, கன்னியாகுமரி நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் புருஷோத்தமன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தாா். இதுகுறித்து கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT