கடலூர்

ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை காவல் சரகம், விஜயமாநகரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜவேல் (60). இவரது மகள் ராதிகா (35), திருமணமாகாதவா். வீராரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

ராதிகாவுக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்தனராம். இதனால், மன வருத்தத்தில் இருந்த அவா் சனிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மங்களம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

SCROLL FOR NEXT