கடலூர்

மணிமுக்தா ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Syndication

மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் வடிநில உபகோட்டத்தில் உள்ள மணிமுக்தாற்றின் நீா்பிடிப்பு பகுதியில் பெய்து பருவ மழையின் காரணமாக தற்போது மேமாத்தூா் அணைகட்டிற்கு வினாடிக்கு 1536 கன அடி வீதம் நீா் வரத்து உள்ளது.

நீா் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவினை பொறுத்து நீா் வரத்து மேலும்அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக வேப்பூா் வருவாய் வட்டாட்சியா், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு மணிமுக்தா ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என வெள்ளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT