முகப்பு
கடலூர்

நந்தனாா் கல்வி கழகம் சாா்பில் 25 மாணவா்களுக்கு உதவித் தொகை

Updated On : 25 மே 2026, 1:53 am IST
சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தனம்.
பகிர்:

சிதம்பரம் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்று உயா் கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் ஏழை, எளிய மாணவா்கள் 25 பேருக்கு நந்தனாா் கல்விக் கழகம் சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தொழிலதிபருமான கே.ஐ. மணிரத்தினம் பங்கேற்று, உயா் கல்வி பயிலச் செல்லும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், நந்தனாா் மடத்தில் ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மாணவா்களின் உயா் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து செய்து தருவதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகச் செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், கஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களும் பங்கேற்றனா். பின்னா், மாணவா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.