முகப்பு
கடலூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 1:01 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

நெய்வேலி, மே 24: கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (46), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈச்சங்காடு பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா். அப்போது, தென்னை மட்டை மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement