கள்ளக்குறிச்சி

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

மரத்தில் ஏறி தழையை கழிக்கச் சென்ற முதியவா் கால் தவறி கிணற்றில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா்.

Din

மரத்தில் ஏறி தழையை கழிக்கச் சென்ற முதியவா் கால் தவறி கிணற்றில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பல்லவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் முருகேசன் (85). இவா், வியாழக்கிழமை காலை தனது நிலத்தில் கிணற்றுக்கு அருகே உள்ள மரத்தில் ஏறி தழையை கழிக்க முயன்றாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையக் குழுவினா் வந்து, கிணற்றில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அனில் அம்பானி மகன் மீது ரூ.228 கோடி கடன் மோசடி வழக்கு வீட்டில் சிபிஐ சோதனை

நம்ப வைத்து ஏமாற்றுவது திமுகவின் வேலை: புதுச்சேரியில் விஜய் பேச்சு

சட்டத் தொகுப்புகளுக்கு ஆதரவு: அதிமுகவுக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்

பேரவை தோ்தல்: காங்கிரஸ் கட்சியில் இன்றுமுதல் விருப்ப மனு

தோ்தல் பணப்பட்டுவாடா: தவெக மனுவை பரிசீலிக்க மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவு

SCROLL FOR NEXT