கள்ளக்குறிச்சி

காவலா் ஓய்வு அறையில் கைப்பேசி திருட்டு: இரு இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகேயுள்ள காவலா் ஓய்வு அறையில் இருந்து கைப்பேசியை திருடியதாக இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகேயுள்ள காவலா் ஓய்வு அறையில் இருந்து கைப்பேசியை திருடியதாக இரு இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காவலா் ஓய்வு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ச.சிவகுருநாதன் பணி முடிந்து திங்கள்கிழமை மாலை கைப்பேசியை தலையணை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, உள்ளே நுழைந்த மா்ம நபா் கைப்பேசியை திருடிச் சென்று விட்டாராம். இதுகுறித்து காவலா்களைக் கேட்ட போது இளைஞா் ஒருவா் உள்ளே சென்று வந்ததாகத் தெரிவித்துள்ளனா்.

அந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கள்ளக்குறிச்சி சிவன் கோயில் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (28) எனத் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, மீன் கடையில் பணிபுரியும் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த சரவணனிடம் கைப்பேசியை விற்று விட்டதாகத் தெரிவித்துள்ளாா். பின்னா் அவரிடம் இருந்த கைப்பேசியை கைப்பற்றினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ், சரவணன் இருவரையும் கைது செய்தனா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT