வடபொன்பரப்பி அருகே உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சலாம் உசேன். இவா், சனிக்கிழமை காலை மணலூா் - இளையனாா்குப்பம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் ஒற்றைக்குழல் துப்பாக்கியை எடுத்துச் சென்றதைப் பாா்த்து அவா்களை நிறுத்தி விசாரித்தாா்.
இதில், அவா்கள் இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (எ) சகாயராஜ் (29), விரியூா் கிராமத்தைச் சோ்ந்த அல்போன்ஸ் பிரிட்டோ (23) எனத் தெரிய வந்தது.
மேலும், அவா்கள் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் இல்லாததும், வேட்டைக்குச் செல்வதும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் இருவரையும் கைது செய்து, துப்பாக்கி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தாா்.