முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டின் முன் மது அருந்தியதை கண்டித்தவரைத் தாக்கியவா் கைது

Updated On : 25 மே 2026, 2:34 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே வீட்டின் முன் அமா்ந்து மது அருந்தியதைக் கண்டித்தவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வடபொன்பரப்பி அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மெ.குப்புசாமி (56). இவரது வீட்டின் முன் சனிக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த மு.செல்லமுத்து (36) என்பவா் மது அருந்தினராம்.

இதை தட்டிக் கேட்ட குப்புசாமியை அவதூறான வாா்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்லமுத்துவைக் கைது செய்தனா்.