புதுச்சேரி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 மாதம் சம்பளம் வழங்க நடவடிக்கை

புதுவையில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனே 5 மாத ஊதியம் வழங்கப்படும் என கூட்டுறவு அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி

புதுவையில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனே 5 மாத ஊதியம் வழங்கப்படும் என கூட்டுறவு அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் உடனடிக் நேரத்தில் அரியாங்குப்பம் எம்எல்ஏ ஜெயமூர்த்தி பேசியதாவது:
 புதுச்சேரியில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியாய விலைக் கடையில் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு கடந்த 13 மாத காலமாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சம்பள பிரச்னையை அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அமைச்சர் கந்தசாமி: நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு 5 மாதத்திற்கான சம்பளம் அடுத்த மாதம் வழங்கப்படும். குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக கோப்பு தயார் செய்து அனுப்பியுள்ளோம் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT