புதுவையில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனே 5 மாத ஊதியம் வழங்கப்படும் என கூட்டுறவு அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உடனடிக் நேரத்தில் அரியாங்குப்பம் எம்எல்ஏ ஜெயமூர்த்தி பேசியதாவது:
புதுச்சேரியில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியாய விலைக் கடையில் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு கடந்த 13 மாத காலமாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சம்பள பிரச்னையை அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் கந்தசாமி: நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு 5 மாதத்திற்கான சம்பளம் அடுத்த மாதம் வழங்கப்படும். குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக கோப்பு தயார் செய்து அனுப்பியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.