புதுச்சேரியில் சுற்றுலாத் துறை சாா்பில் 2 நாள் புதுவை வரலாற்று புகைப்பட கண்காட்சியை சனிக்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.  
புதுச்சேரி

புதுவை வரலாற்று 2 நாள் புகைப்பட கண்காட்சி

தினமணி செய்திச் சேவை

புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

மேலும், இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் (நவ.2) நடக்கிறது. காலை 10 முதல் இரவு 10 மணி வரை இக் கண்காட்சி திறந்திருக்கும். இதில் கல்வியாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாா்வையிட்டு பயன் பெறலாம் என்று சுற்றுலாத்துறை இயக்குநா் கே.முரளிதரன் கூறியுள்ளாா்.

முன்னதாக இக் கண்காட்சி திறப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறை செயலா் டி. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT