விழுப்புரம்

கடும் வெயில் தாக்கத்தால் முதியவர் சாவு

விழுப்புரம் அருகே புதன்கிழமை கடும் வெயில் தாக்கத்தால் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

தினமணி

விழுப்புரம் அருகே புதன்கிழமை கடும் வெயில் தாக்கத்தால் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
 விழுப்புரத்தில் புதன்கிழமை 109 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்று காரணமாக வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் கானல் நீர் காணப்பட்டது.
 வெயிலுக்கு முதியவர் சாவு: விழுப்புரம் அருகேயுள்ள கண்டியமடை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (65). விவசாயத் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியில் புதன்கிழமை நடந்து சென்ற போது வெயின் தாக்கத்தால் மயங்கி விழுந்து இறந்தார்.
 இதுதொடர்பாக தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT