விழுப்புரம் அருகே புதன்கிழமை கடும் வெயில் தாக்கத்தால் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் புதன்கிழமை 109 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்று காரணமாக வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் கானல் நீர் காணப்பட்டது.
வெயிலுக்கு முதியவர் சாவு: விழுப்புரம் அருகேயுள்ள கண்டியமடை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (65). விவசாயத் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியில் புதன்கிழமை நடந்து சென்ற போது வெயின் தாக்கத்தால் மயங்கி விழுந்து இறந்தார்.
இதுதொடர்பாக தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.