விழுப்புரம் அருகே ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொகையை கேட்டு தகராறு செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள காணை அடுத்த சோழம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் (26) உள்ளிட்ட அதிகாரிகள், அங்குள்ள ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக ஏரிக்கரை பகுதியில் நின்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஏழுமலை(40) என்பவர், தான் ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்ததற்கு இதுவரை கூலி தரவில்லை என்றும், அதை உடனே வழங்க வேண்டும் எனவும், அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த நாற்காலியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் காணை போலீஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.