விழுப்புரம்

கூலி கேட்டு தகராறு: ஒருவர் கைது

விழுப்புரம் அருகே ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொகையை கேட்டு தகராறு செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

விழுப்புரம் அருகே ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொகையை கேட்டு தகராறு செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் அருகேயுள்ள காணை அடுத்த சோழம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் (26) உள்ளிட்ட அதிகாரிகள், அங்குள்ள ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக ஏரிக்கரை பகுதியில் நின்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ஏழுமலை(40) என்பவர், தான் ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்ததற்கு இதுவரை கூலி தரவில்லை என்றும், அதை உடனே வழங்க வேண்டும் எனவும், அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
 மேலும், அங்கிருந்த நாற்காலியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் காணை போலீஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT