விழுப்புரம்

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறிய ரக சரக்கு வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 மரக்காணம் அருகே அனிச்சங்குப்பம் பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்துமாறு போலீஸார் சமிக்ஞை செய்தனர். இதனைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.
 போலீஸார், சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 2,420 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இந்த மதுப்புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றிருக்கலாம் என்ற போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 இதையடுத்து, மதுப்புட்டிகளுடன் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT