விழுப்புரம்

புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மண்டல அமைப்பாளர் ஆர்.வேலு தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எஸ்.செல்வராஜ், துணைச் செயலர் வ.சதீஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூவைஆறு, பொருளாளர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 மாணவி அனிதா தற்கொலைக்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT