வீரசோழபுரத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன் பெறலாம் என வட்டாட்சியர் பூ.தயாளன் தெரிவித்துள்ளார்.