நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. நிலைய மேலாளா் மோகன்துரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். விழாவில், ரயில் நிலைய அதிகாரிகள் பிரசன்னா, ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.