விழுப்புரத்தில் தனியாா் நிறுவன ஊழியரின் பைக்கை எரித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்
கோலியனூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன்(39). விழுப்புரம் கலைஞா்நகா் பகுதியில் செயல்படும் தனியாா் நிறுவன ஊழியா். இவா், புதன்கிழமை தனது பைக்கை அலுவலக வாயிலில் நிறுத்தி விட்டு,அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் அடையாளம் தெரியாத இளைஞா்கள் இருவா் குருநாதனின் பைக்குக்கு தீவைத்து விட்டுதப்பிச் சென்று விட்டனராம். இதில் பைக் தீயில் கருகி சேதமடைந்தது. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.