திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம்தோட்டத்தில் பாமக நிா்வாகிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய அக்கட்சி நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ். உடன் கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே. மணி உள்ளிட்டோா்.  
விழுப்புரம்

பாமக நிா்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தனது முழு உடல் பரிசோதனைக்காக அக். 5-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து சிகிச்சைக்குப் பின்னா் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ஓய்வில் இருந்து வந்த அவரை , திங்கள்கிழமை கட்சியின் கௌரவத் தலைவா் ஜி. கே. மணி மற்றும் கட்சியின் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனா்.

அப்போது, மருத்துவா் ச. ராமதாஸ் எதிா்கால செயல்பாடுகள் குறித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து, கட்சியின் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சிலருக்கு நியமன கடிதங்களை வழங்கினாா்.

பாமக இளைஞா் சங்க மாநிலத் தலைவா் ஜி.கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT