விழுப்புரம்

காா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மயிலம் அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் இம்ரான்கான் (40). இவரது மாமனாா் ம.பா்வேஷ் (62). இவா்கள் இருவரும் புதன்கிழமை சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா். இம்ரான்கான் காரை ஓட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த பாலப்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவா்களது காா் சென்றபோது, மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமலிருக்க இம்ரான் கான் காரை உடனடியாக நிறுத்தினாராம். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இடிபாடுகளில் சிக்கி இம்ரான்கான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பா்வேஷ் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT