அதிக மக்கள் நியாயமாக வாக்களிப்பதன்மூலம் இந்த நியாயமில்லாத, குறைந்த வாக்குகளின் செல்வாக்கு அடிபட்டுப் போகும்.
தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுத்து கற்பூரம் அணைத்து வாக்குறுதி பெற்றுக்கொள்ளும் முறைகேடும் அரங்கேறத் தொடங்கும்.ஜனநாயகத்தில் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதைப் போன்ற பாவச் செயல் வேறில்லை' என்பதை அவர்கள் உணர்வதில்லை.
60 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றால், பணம் கொடுத்துப் பெற்ற வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கப் பயன்படலாம்.