பொறுப்பால் உயரும் பெருமை!

எந்த ஒரு சூழலிலும் சமரசம் செய்துகொள்ளாத நேர்மையும், சோர்வறியா உழைப்பும், நெருக்கடியான நேரங்களில் எடுக்கும் முடிவுகளும் அந்தப் பதவிக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது. பதவியில் இருப்பவர்களால் மட்டுமே அந்த நிறுவனத்தை உயர்த்த முடியும். பதவி அதற்கான ஆயுதம். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து விதிகளையும் பயன்படுத்தி, நிதி பெற்று அந்த நிறுவனத்தை உயர்த்த வேண்டும். பல இடங்களில் நிரந்தர தலைமையை நியமிக்காமல் பொறுப்பு முதல்வர் என ஒருவரிடம் நிர்வாகத்தைக் கொடுக்கிறார்கள்; பொறுப்பு தலைமையால் பெரிய முடிவுகளை எடுக்க முடியாது.

எந்த வளர்ச்சியைப் பற்றியும் அக்கறை காட்டாமல், காலத்தை ஓட்டுபவர்கள் தயவுசெய்து பதவியை ஏற்றுக் கொள்ளாமல் மறுதலித்துவிட வேண்டும். திறமை ஒதுக்கப்பட்டு வெறும் பொம்மை அமரக் கூடாது. முடிவாக, ஒரு நிறுவனம் புத்துயிர் பெறுவதற்கு நவீன வசதிகளும், போதுமான நிதி ஆதாரங்களும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அதை வழிநடத்தும் தலைவரின் ஆளுமை; அவரைப் பார்த்து மற்றவர்களும் உத்வேகம் அடைவர். பதவியில் இருக்கும் போதே எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவும் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்பவர்களின் பெயர்கள் கல்வெட்டில் செதுக்கிய எழுத்துப்போல மக்கள் மனதில் பொறிக்கப்படும். பதவிக் காலத்தை வீணே கழிப்பவர்களின் பெயர்கள் நீர்மேல் எழுத்துப்போல மறைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..