அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெய்யில் மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது.
வெய்யில் நேரத்தில் வெளியே சென்றால் குடை கொண்டு செல்லலாம். வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.
வெய்யிலில் வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
முகம், கை, கால்களுக்கு சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.
நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்கலாம்.
ஜீன்ஸ் லெக்கின்ஸ் உள்ளிட்ட இறுக்கும் ஆடைகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள், முதியோர்கள் 12 மணி முதல் 4 மணி வரை வெய்யிலில் வருவதைத் தவிர்க்கலாம்.
வெய்யிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுத்தமான தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல், இளநீர் அதிகம் பருகலாம்.