தொல் தமிழ்நாட்டைப் பொருத்தவரை வழிபடும் கடவுளையும் நிறைய வாசித்தவர்களாக, கற்றவர்களாகத்தான் கொண்டாடியிருக்கிறார்கள்.
புத்தகத்தை வாங்கி வாசிப்பவர்கள் உண்டு; புத்தகங்களிலேயே வசிப்பவர்களும் உண்டு.
ஒருமுறை தான் படித்தது அடுத்து வர இருக்கிற ஏழு பிறப்பிலும் உடன் வந்து புகழ் சேர்க்கும் என்கிறார் வள்ளுவர்.
சில ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம் இலக்கியங்கள் நம் கைகளில் தவழ்கின்றது என்றால், அதற்கு வாசகர்களின் நேசம்தான் காரணம்.
இன்று நூல்களின் செழுமையை முகநூல் (ஃபேஸ் புக்) கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கி உள்ளது.
நூல்களைப் பார்த்து படித்தார்கள் அன்று; முகநூலை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் இன்று.
எப்படியும் முகநூலை வாசிக்க வைத்துவிடவேண்டும் என்று சில பதிவர்கள் கடும்முயற்சி எடுக்கின்றனர்; பலன் அவ்வளவாக இல்லை.வாசிப்பை நேசிப்போம்; நூல் கற்று உயர்வோம்!