உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வாழைப் பூ

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


வாழைப் பூ:

  • வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் , ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக செல்லும்.
  • வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
  • வாழைப்பூவை  தினந்தோறும் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

வாழைப்பூ கஷாயம்:

  1. வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று) இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்  இஞ்சி(5 கிராம்) 
  2. பூண்டு பல் (5) , மிளகு (1 ஸ்பூன்)
  3. சீரகம்(1 ஸ்பூன்) சோம்பு (1 ஸ்பூன்) ,
  4. தனியா விதை (1 ஸ்பூன்) ,
  • கறிவேப்பிலை (சிறிதளவு) இவை அனைத்தையும் எடுத்து நன்றாக இடித்து கஷாயம்  வைத்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் வீதம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் குடித்து வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை குணமாகும்.
  • வாழைப் பூவை  தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதலை தடுக்கும். உள்மூலம், வெளிமூலப் புண்களுக்கு சிறந்த மருந்தாகும். மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

SCROLL FOR NEXT