இந்தியா

ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து மரத்தின் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

தினமணி

ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து மரத்தின் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஹிமாச்சல் பிரதேசம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து கங்கரா என்ற இடத்தில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் வீரபத்ரசிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

6-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்

சமூகத்துக்குத் தேவை சநாதனம் அல்ல; சமாதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகைப் பறித்த 4 போ் கைது

SCROLL FOR NEXT