முகப்பு
இந்தியா

குஜராத்: மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளிப் பெண் வந்தனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2021, 2:32 pm IST
குஜராத்: மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்
பகிர்:


குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளிப் பெண் வந்தனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது ரங்கோலியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை வரைந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார் வந்தனா. அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், வாழ்க்கையில் தொடர்ந்து சவால்கள் வந்துகொண்டேதானிருக்கும். ஆனால், எந்த சவாலையும் விட்டுவிடாமல், எதிர்கொண்டு அதை வீழ்த்துவதே உண்மையான வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் கிடைக்கப்பெற்றதால் வந்தனா மிகுந்த உற்சாகம் அடைந்திருப்பதாக அவரது சகோதரர் கிஷண்பாய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரிக்கு பிறந்தது முதலே காது கேட்பதும், வாய்ப்பேசவும் முடியாமல் போனதாகவும், தற்போது அவர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.