நவி மும்பை நெடுஞ்சாலையில் சொகுசுப் பேருந்தில் தீ விபத்து
நவி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
நவி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நெடுஞ்சாலையில் 22 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்தது. எனினும், இதில் அனைவரும் காயமின்றி தப்பினர் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்ஜினிலிருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தி, பயணிகளை வெளியேறுமாறு எச்சரித்தார் என்று தீயணைப்பு நிலைய அதிகாரி யு.பி. அக்ரே கூறினார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் ஒரு தண்ணீர் டேங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பிறகு குளிர்விக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.