மலேசியாவில் கணவர் மாயம்: கண்டுபிடித்துத் தரக் கோரி மனைவி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
மலேசியாவில் 18 மாதங்களுக்கு முன்பு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ரத்தில மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில்
மலேசியாவில் 18 மாதங்களுக்கு முன்பு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ரத்தில மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த என்.தெய்வானை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு
என்னுடைய கணவர் எம்.நல்லதம்பி, அவரது நண்பர் செய்யது முகமதுவைப் பார்க்க அடிக்கடி மலேசியா செல்வார்.இதே போன்று கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியா சென்றிருந்தார். அப்போது, அதே மாதம் 12-ஆம் தேதி மலேசியா விமான நிலையத்துக்கு எனது கணவரும், செய்யது முகமதுவும் காரில் வந்துள்ளனர்.ஆனால், அவர்கள் இருவரும் அன்றைய தினம் காணாமல் சென்றனர். இது தொடர்பாக செய்யது முகமதுவின் மனைவி, எனது கணவரும் நல்லதம்பியும் காணவில்லை என மலேயசியன் தூதரகத்தில் புகார் அளித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் காணாமல் போன கார் 19-ஆம் தேதி விமான நிலையம் அருகே கண்டறியப்பட்டது. அதில் எனது கணவர் இல்லை. இதுவரை அவரை கண்டுபிடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.எனது கணவர் மாயமாகி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இது தொடர்பாக மலேசிய தூதரகம், இந்தியத் தூதகரம், இந்திய வெளியுறவுத் துறை ஆகியோரிடம் பல்வேறு புகார் அளித்துட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் மாயமானதிலிருந்து நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை.
எனவே, மலேசியாவில் மாயமான எனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை, மலேசியன் உயர் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.