கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கிடையே நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி மன்னருடனும், ஐக்கிய அரபு நாடுகளின் ராணுவ துணை தலைவருடனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது: -
தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும் பயங்கரவாத அமைப்புக்களின் நிதியுதவியைத் தடுக்கவும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேவைப் பட்டால் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தின் மூலம், தங்கள் கருத்து வேறுபாடுகளை தீர்க்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.