கோவாவில் நடைபாலம் இடிந்து விழுந்ததில் 50 பேர் ஆற்றில் மூழ்கினர். தெற்கு கோவா ஜீவாரி ஆற்றின் குறுக்க கட்டப்பட்டிருந்த நடைபாலம் இன்று மாலை திடீர் என இடிந்து விழுந்தது.
இதில் 50 பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் நீச்சல் அடித்து அடித்து ஆற்றைக் கடந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த இந்த பாலம் போர்ச்சுகீசியர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.