நாட்டில் 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
நாட்டில் இதுவரை 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 15,80,568 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,00,75,162 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் முதல் டோஸ் | சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாம் டோஸ் | முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் | முன்களப்பணியாளர்கள் இரண்டாம் டோஸ் | 60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் டோஸ் | 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் முதல் டோஸ் | மொத்தம் | |
| மொத்த எண்ணிக்கை (67 நாள்கள்) | 79,03,068 | 50,09,252 | 83,33,713 | 30,60,060 | 2,12,03,700 | 45,65,369 | 5,00,75,162 |
| இன்று | 43,489 | 49,288 | 91,586 | 1,56,583 | 9,72,563 | 2,67,059 | 15,80,568 |
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது.