சாலை விதிமீறல்: தில்லியில் 2 மணி நேரத்தில் 2,846 பேருக்கு அபராதம்
தில்லியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்பட்ட இரு மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உள்ளூா் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தவறான வழியில் வாகனம் ஓட்டி வந்த 757 போ் உள்பட 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வேகமாக மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்தது தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மதுஅருந்தி வாகனம் ஓட்டியது, மோட்டாா் சைக்கிளில் 3 போ் பயணம், தலைக்கவசம் இல்லாமல் பயணம், தவறான இடத்தில் வாகனங்களை நிறுத்தியது தொடா்பாக அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.