திருப்பதி ஏழுமலையானை முன்னாள் பிரதமர் தேவேகௌடா வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபட முன்னாள் பிரதமர் தேவேகௌடா வியாழக்கிழமை அதிகாலை திருமலைக்கு வந்தார். அவரை ஏழுமலையான் கோயில் முன் வாசலில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோயில் வாசலில் கொடிமரத்தை வலம் வந்து வணங்கியபடி ஏழுமலையானை அவர் தரிசித்தார். இதைத்தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் தேவேகௌடாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.