நாராயணர்-அனந்தசயனர் சுவர்ண மண்டபம் பிரதிஷ்டை
மதுராந்தகத்தை அடுத்த சித்திரவாடி, நயா திருப்பதியில் நாராயணன்-அனந்தசயன சுவர்ண மண்டபம் மற்றும் புவனேஸ்வரித் தாயார் ஆலயம் ஆகியவற்றின் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த சித்திரவாடி, நயா திருப்பதியில் நாராயணன்-அனந்தசயன சுவர்ண மண்டபம் மற்றும் புவனேஸ்வரித் தாயார் ஆலயம் ஆகியவற்றின் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்திரவாடி, நயா திருப்பதியில் வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை சார்பாக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பத்மாவதித் தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர், சிம்மகிரி மலையில் லட்சுமி நரசிம்மர், மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர், பாவன நரசிம்மர், ஆனந்தவல்லித் தாயார், சனீஸ்வர பகவான், ஏகாந்த ஈஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து நாராயணர்-அனந்தசயனர் சுவர்ண மண்டபம் மற்றும் புவனேஸ்வரி தாயார் சந்நிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சந்நிதி வளாகத்தில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. மேளதாளம் முழங்க, வேத விற்பன்னர்கள் சுவாமி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.