தமிழ்நாடு

சூறைக்காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் பலி

பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (54). இவர் வியாழக்கிழமை மாலை பாப்பாரப்பட்டியில் இருந்து தருமபுரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

DIN

பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (54). இவர் வியாழக்கிழமை மாலை பாப்பாரப்பட்டியில் இருந்து தருமபுரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பச்சினம்பட்டியை அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரிப் பகுதியில் சென்றபோது லேசான தூறலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோர புளிய மரம் ஒன்றின் கிளை காற்றால் முறிந்து ரவியின் மீது விழுந்தது.
இதில், ரவி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தருமபுரி நகர காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT