தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்: முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் நிகழ் நிதியாண்டில் 10,000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் நிகழ் நிதியாண்டில் 10,000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலன்களைப் பேணிக் காக்கும் வகையில், அவர்களுக்கு ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் 5 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடக்கும் போது நான்கு அல்லது ஐந்தடிக்கு முன்பாக இருக்கும் தடைகளை அதிர்வுகளின் அடிப்படையில் முன்கூட்டியே நவீனரக மடக்குக் குச்சிகள் உணர்த்தும்.
இப்போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிரும் மடக்குக் குச்சிகளை 5,000-த்திலிருந்து 10,000-மாக உயர்த்தி வழங்கப்பட் உள்ளது. நிகழ் நிதியாண்டில் 10,000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல் வழங்க ரூ.3 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT