முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க திருச்சியை சேர்ந்த லோகநாதனிடம் ரூ.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்வழக்கில் நத்தம் விஸ்வநாதன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய திருச்சி குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக திருச்சி கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.