முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால்.. ஜெயக்குமார்

அதிமுகவில் கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 11:14 am IST
பகிர்:

சென்னை: அதிமுகவில் கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை என்று கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது ஒரு கட்சிக்கு  தலைவராக இருப்பவருக்கு அழகல்ல.
 
ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை தொடர்பான மனுவை ஆளுநர் பன்வாரிலால் இதுவரை நிராகரிக்கவில்லை.

Advertisement

Advertisement

கூட்டணியின் கதவு திறந்தே இருக்கும். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.