தமிழ்நாடு

கனமழை: சென்னையில் 38 மரங்கள் விழுந்தன

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 38 மரங்கள் விழுந்துள்ளன.

DIN


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 38 மரங்கள் விழுந்துள்ளன.

நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று (24.11.2020) முதல் இன்று (25.11.2020) வரை 38 மரங்கள் விழுந்துள்ளன.

இதுபற்றி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சென்னையில் பெருமழை காரணமாக நேற்று (24.11.2020) முதல் இன்று (25.11.2020) காலை 08.00 மணி வரையில் வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம், யானைகவுனி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், வேப்பேரி, அரும்பாக்கம் உட்பட 26 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் விழுந்த 38 மரங்களை சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தினர். மரங்கள் விழுந்ததில் 4 இலகு ரக வாகனங்கள் சேதமடைந்துள்ளன."

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கால்களைச் சங்கிலியால் கட்டி... நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு விமானத்தில் கொடுமை!

குறுநகை... பாடினி குமார்!

"அனுபமா கூட நடிப்பேன்னு நினைத்துப்பார்க்கல" | Pradeep ranganathan interview | Dragon

மாலத்தீவில்.. சாக்‌ஷி அகர்வால்!

தங்கமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT