முகப்பு
தமிழ்நாடு

சந்தனக் கட்டைகள் வைத்திருந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவா் மீது வழக்கு

சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த வாரம் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருள்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், வெங்கடாசலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைப்பற்றிய சந்தனக் கட்டைகள், அவற்றால் ஆன பொருள்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவை அனைத்தும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததன் அடிப்படையில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →