காலமானாா் பத்திரிகையாளா் முகம் மாமணி
பத்திரிகையாளரும் ‘முகம்’ இதழின் ஆசிரியருமான முகம் மாமணி (90), வயது மூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
பத்திரிகையாளரும் ‘முகம்’ இதழின் ஆசிரியருமான முகம் மாமணி (90), வயது மூப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
நெல்லை மாவட்டம் குருவன்கோட்டையை பூா்விகமாகக் கொண்டவா் முகம் மாமணி. இளம் வயதிலேயே எழுத்தாா்வம், பேச்சாா்வம் இருந்ததால் மேடைப் பேச்சுகளிலும், பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதியும் வந்தாா். இவருடைய படைப்புகள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன.
1983-ஆம் ஆண்டு ‘முகம்’ என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கினாா். இவரது தமிழ்ப் பணிக்காக இதுவரை 11 விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2006-இல் சமச்சீா் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியதில் முக்கியப் பங்காற்றியவா்.
Advertisement
Advertisement
இவருக்கு ராதா என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.
மாமணியின் இறுதிச் சடங்குகள், சென்னை நெசப்பாக்கம் மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு 94446 77194.