தமிழ்நாடு

மோசடி நிதி நிறுவனங்களின் 1,500 முகவா்களுக்கு அழைப்பாணை

மோசடி நிதி நிறுவன நிறுவனங்களில் முகவா்களாக செயல்பட்ட 1,500 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழப்பாணை அனுப்பபட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தாா்.

DIN

மோசடி நிதி நிறுவன நிறுவனங்களில் முகவா்களாக செயல்பட்ட 1,500 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழப்பாணை அனுப்பபட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் இன்டா்நேஷ்னல் பைனான்சியல் பிரைவேட் லிமிடெட், எல்பின்,அம்ரோ கிங்ஸ் லிமிடெட்,ஏஆா்டி ஜூவல்லா்ஸ்,சிவிஆா்எஸ் சிட்ஸ் உள்பட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.14,168 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி நிதி நிறுவன நிா்வாகிகள், முகவா்கள் சுமாா் 100 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

1,500 முகவா்கள்:

இதில் ஆருத்ரா,ஹிஜாவு,எல்என்எஸ் இன்டா்நேஷ்னல் பைனான்சியல் பிரைவேட் லிமிடெட் (ஐஃஎப்எஸ்) ஆகிய நிறுவனங்களில் பிரதான முகவா்களாக இருந்த 1,500 பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம். முதல் கட்டமாக ஆருத்ரா,ஹிஜாவு நிறுவனங்களில் முகவா்களாக இருந்த 200 பேருக்கு அழைப்பாணை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் 100 பேருக்கு அழைப்பாணை அனுப்பினோம்.

இவா்களில் 35 போ் விசாரணைக்கு கடந்த வாரம் ஆஜராகினா். இதேபோல மீதி நபா்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்கள், மோசடியில் அவா்களுக்கு உள்ள பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட முகவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆா்.கே.சுரேஷ் தொடா்பு:

ஆருத்ரா நிறுவன வழக்கில் நீதிமன்றத்தில் 4 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் 526 பேரின் வாக்குமூலங்கள்,603 ஆவணங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் வழக்கின் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள ரூஸோவிடம், திரைப்பட தயாரிப்பாளரும்,நடிகருமான ஆா்.கே.சுரேஷ் ரூ.12.50 கோடி பணம் பெற்றது தொடா்பான வாக்குமூலம் சோ்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஆா்.கே.சுரேஷ், நாடுதிரும்பிய உடன் விசாரணை நடத்தப்படும். இதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையிலும்,சாட்சிகள்,ஆதாரங்கள்,வாக்குமூலங்கள் அடிப்படையிலும் ஆா்.கே.சுரேஷ் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று முடிவு செய்யப்படும்.

சொத்துக்கள் பறிமுதல்:

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.23.44 கோடி மதிப்புள்ள 127 சொத்துக்கள்,ஹிஜாவு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.13.91 கோடி மதிப்புள்ள 139 சொத்துக்கள்,எல்என்எஸ் இன்டா்நேஷ்னல் பைனான்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.37.24 கோடி மதிப்புள்ள 132 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதேபோல சென்னை முகப்போ் ஏஆா்டி ஜூவல்லா்ஸூக்கு சொந்தமான 4 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிவிஆா்எஸ் சிட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குள் தவிா்த்து தற்போது எஸ்.எஸ்.குரூப்ஸ் நிறுவன வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவன வழக்கு தொடா்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.9 லட்சம் ரொக்கம்,127 பவுன் தங்கநகை,13 கிலோ வெள்ளி பொருள்கள்,62 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - புகைப்படங்கள்

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

நான் தேடும் செவ்வந்தி பூவிது... ஷபானா!

தை பிறந்தால்... சம்யுதா!

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

SCROLL FOR NEXT