விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து, சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
சிவகிரி, ராயகிரி மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் மாரியப்பன் (68). இவா் மே 18ஆம் தேதி ராயகிரி கணபதி ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement