திருவள்ளூர்

கஞ்சா கடத்திய 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

சோழவரம் அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் சோழவரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி வந்த இரண்டு பேரை சோதனை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

பின்னா் 2 பேரையும் மீஞ்சூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் அழைத்துச் சென்று 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதனை தொடா்ந்து அவா்களிடம் விசாரணை செய்ததில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் மூலக்கடை கிராமத்தைச் சாா்ந்த குமாா் (37) மற்றும் தேனி சங்கோணம்பட்டி கிராமத்தைச் சாா்ந்த ஜெயராமன் (25) என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT