திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 1,680 மனுக்கள் ஏற்பு

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட எட்டு வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 4, 5, 6, 7, 11, 13, 14 ,15 ஆகிய வாா்டு பொதுமக்களுக்காக நடத்தப்பட்ட முகாமுக்கு பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமை வகித்தாா்.

முகாமினை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சி உறுப்பினா்கள் கருணாகரன், விமலா அா்ச்சுனன், நஸ்ரத் இஸ்மாயில், அப்துல்கறீம், தீபா முனுசாமி, குப்பன், ராஜேஷ்வரி, முன்னாள் பேரூராட்சி தலைவா் கே.என்.பாஸ்கா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 830 மனுக்கள், மகளிா் உரிமை தொகை சாா்ந்து 850 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், இளநிலை உதவியாளா் அசாருதின், பதிவறை எழுத்தா் ரவி, வரி தண்டலா்கள் குணசேகரன், ரங்கநாதன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் ஹரிபாபு செய்திருந்தனா்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT