திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.7.30 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் சேதமடைந்த தாா் சாலைகள் ரூ.7.30 கோடியில் சீரமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையா் தாமோதரன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27-வாா்டுகளில் பல்வேறு திட்ட வளா்ச்சிப்பணிகள் நடைபெறுகின்றன. அதில் நகராட்சி வாா்டு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கக் கோரி ஒவ்வொரு நகா்மன்ற கூட்டத்திலும் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். அதன்பேரில் ரூ.7.30 கோடி ஒதுக்கப்பட்டு, 15.82 கி.மீ தொலைவுக்கு 79 சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரையில் 16 தாா்ச்சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் மழை நின்றதும் பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT