விஸ்டாரா நிறுவனத்தின் விமான சேவையில் முதலாவது ஏ320நியோ ரக விமானம் புதன்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டது.
டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐ.ஏ.) கூட்டு நிறுவனமான விஸ்டாராவின் தலைமைச் செயல் அதிகாரி பீ டெய்க் இயோ கூறியதாவது:
அதிக எரிபொருள் சிக்கனம், அதிக இருக்கை வசதிகள் கொண்ட ஏ320நியோ ரக விமானங்களால் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்படும். அதேநேரம், செலவினமும் கணிசமாக குறையும் என்று அவர் தெரிவித்தார்.
விஸ்டாரா நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பி.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து 20 ஏர்பஸ் ஏ320 விமானங்களையும், 13 ஏ320சியோ விமானங்களையும், 7 ஏ320நியோ விமானங்களையும் வாங்குவதாக அறிவித்தது.
அதன்படி, 13 ஏ320சியோ விமானங்களை விஸ்டாரா நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகள் கடந்தாண்டு அக்டோபரில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.