விருதுநகர்

மகளிா் சுய உதவிக் குழு விற்பனைக் கண்காட்சி

Syndication

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சி, விற்பனை முகாம் சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதா பெரியதாய் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா குத்துவிளக்கேற்றி கண்காட்சி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த புடவைகள், சணல்நாா் பொருள்கள், மரப் பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், திண்பண்டங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஜெ.ஜாா்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

SCROLL FOR NEXT